பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ரன்வீத் சிங் பிட்டு சற்றுமுன் பாஜகவில் இணைந்தார். லூதியானா எம்.பியான இவர், அம்மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக செயல்பட்டிருக்கும் பிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில், திடீரென அவர் பாஜகவுக்கு தாவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.