அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை பங்குச்சந்தைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இன்று ஜனவரி இருபதாம் தேதி சந்தைகள் காலை 9:00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை செயல்பட உள்ளது. இன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போல விடுமுறை என்று நினைத்திருந்த முதலீட்டாளர்களுக்கு இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மூடப்படும் சந்தைகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை இயங்கும்.