தாய்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுலாத்துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.