நடிகை கௌதமியின் நிலத்தை அபகரித்த புகாரில், அழகப்பன் வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய கௌதமி, 25 கோடி ரூபாய் சொத்தை அழகப்பன் உள்ளிட்ட இருவர் அபகரித்ததாக புகாரளித்தார். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த நிலப்பத்திர ஆவணங்களை சரிபார்த்ததுடன் 11 அறைகளுக்கு சீல் வைத்துச் சென்றனர்