குஜராத்தில் உள்ள மோர்பி அருகே உள்ள கான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ஹஸ்முக்கின் தாய் ஜிங்கியை, தந்தை ரெம்லா படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தாயின் இறந்த உடலை சொந்த ஊரான சோட்டா உதேபூருக்கு எடுத்துச் செல்ல ரேம்லா குடும்பத்தினர் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 410 கிலோமீட்டர் தூரம் காரில் பயணித்த ஹஸ்முக், சொந்த ஊருக்கு செல்லாமல் தாயின் சடலத்தை சோட்டா உதேபூர் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.