தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வருகிற 17-ம் தேதி சந்திக்கிறார் விஜய்.

அப்போது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க இருக்கிறார். இந்த நிலையில் விருது பெறக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகளானது துவங்கியுள்ளது. அதோடு பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் கல்வி விருது வழங்கக்கூடிய விழாவில் 6,000 பேர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.