சென்னை கேகே.நகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதா வசித்து வருகிறார். இவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளிட்டுள்ள வீடியோவில், தங்கள் வீட்டின் வாசலில் இருந்த சில பொருட்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில் 2 நபர்கள் உயர்ரக பைக்கில் வந்து காலணிகளை திருடி சென்றது பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

வேறு ஏதோ பொருட்களை திருட வந்து, எதுவும் கிடைக்காமல் செருப்பை திருடி விட்டு சென்றார்களா என்பது தனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பானதாக இருக்கும் என நினைத்ததாகவும், இனி அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் நடிகை சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.