ஹெச்.வினோத் டைரக்டில் அஜித் நடித்த துணிவு படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி வெற்றியடைந்தது. இந்நிலையில் அஜித்தின் 62-வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக கடந்த மே 1-ஆம் தேதி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போது அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் சூட்டிங்கை 70 நாட்களில் மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளாராம்.

இதனிடையே அஜித் 40 நாட்களில் தனக்கான காட்சிகளை படமாக்கிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் முதற்கட்டமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார். 4 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இறுதிக்கட்ட பணிகளை துவங்க திட்டமிட்டுள்ள மகிழ்திருமேனி, அடுத்த வருடம் ஜனவரியில் பொங்கல் தினத்தில் அஜித்தின் 62-வது படமான விடா முயற்சியை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம்.