கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஜார்ஜியார் தெருவில் சூசை மார்க் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சூசை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சூசையை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சூசை ஏற்கனவே விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.