கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது தேலே செவ்வா எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வந்ததும் காரை சாலையில் ஓட்டிக் கொண்டிருந்தவர் ரயில் தண்டவாளத்தில் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கேட் கிப்பர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த ஜெய்பிரகாசையும் காரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.