தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் பேவரட் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினிக்கு அப்பாவாக நடித்த வெள்ளித் திரையில் கால் தடம் பதித்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த எங்கள் அண்ணா மற்றும் மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் இவரை காண முடிகிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு 21 வயதில் திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. விவாகரத்திற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. விவாகரத்து ஆன பிறகு என்னை விட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன் என மனம் வருந்தி பேசியுள்ளார்.