சின்னத்திரையில் பிரபலமடைந்து பின்னர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக்குறைவால் நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர், மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

தற்போது அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.