தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் வெப்ப நிலை 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.