டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பருவம் தவறிய கனமழையின் காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை மத்திய அரசு ஏற்று தற்போது 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என அறிவித்துள்ளது.