ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 95 வயதை கடந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தான் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓபிஎஸ் ரத்து செய்துள்ளார். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.