Tasmac மூலம் ரூ.44,098.56 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், 2022 – 2023ல் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரி மூலமாக ரூ. 33697 கோடியும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.8047.91 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 2003 இருந்து 2023 வரை ஒவ்வொரு ஆண்டும் Tasmac வருவாய் உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.