சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.