தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

உழவர் சந்தைகளில் அமைக்கப்படும் இந்த உணவகங்கள் காலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட்டு பலகையில் எழுதிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.