தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அக்டோபர் 9ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.