தமிழ்நாட்டிற்கு அவசரக் கதியில் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் நாடு முழுவதும் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளிடமும் கருத்துக்களை பெற்று தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக பூத் சிலிப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.