தமிழ்நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய அவர், “பாஜகவை ஆதரிப்பவர்களுக்கு ஒருநிலைபாட்டையும், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நிலையையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதற்கு எல்லாம் விசிக பயப்படாது. நமக்கு பானை சின்னம் நிச்சயம் கிடைக்கும். இந்த தேர்தலுடன் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம்” எனக் கூறினார்.