தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெறுவதற்கே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின்போது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய பிரிவுகளில் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.