தமிழகத்தில் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆடு, மாடு, கோழி, மீன்  வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.  நடப்பு ஆண்டு ரூ.1500 கோடி வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கத் திட்டமிடபட்டுள்ளது.

இந்த வட்டியில்லா கடன், 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி அவர்கள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.