தமிழகத்தில் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 20 கிலோ 30 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முன்னுரிமை அட்டைதாரர்களில் பலரும் மாதந்தோறும் அரிசியை முறையாக பெறாததால் இவர்கள் பெறாத இந்த அரிசி முறைகேடாக வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் இதனை தடுப்பதற்கு உணவு வழங்கல் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இனி முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆதார் எண்களை இணைக்கும் படை தமிழக முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நடைமுறை மூலம் அரிசி பெறாதவர்களின் விவரங்களையும் பெற முடியும் என அரசு தெரிவித்துள்ளது.