தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும் மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்குவது தொடர்பாக தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.