தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளில் 23 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 3542 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலகம் நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலகம் மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பு பணி தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.