தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் ஒரு வாரத்தில் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வந்தடையும் என்ற சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராமநாதபுரத்தில் பேசிய அவர், செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க நிகழ்வினை சுட்டிக்காட்டி பேசினார். யார் யார் தகுதியானவர்கள் என்று வரையறுக்கும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு நம்பிக்கை அளித்துள்ளது.