முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்குகிறது. மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட முகாமானது மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும்.

காலை 9 மணி முதல் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கவும், முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.