தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் சற்றுமுன் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டாது என தகவல் வெளியான நிலையில், இன்று இரவுக்குள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 பணம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்