தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே கொரோனா காரணமாக லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டென்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

அதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் வழங்காதது உள்ளிட்டவையோடு சேர்த்து மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.