சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு அரசு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி உதாரணம் என்று விமர்சித்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர். ஆனால் அதிமுக ஆட்சியின் போது மூன்று சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்று விட்டனர்.

அதிமுக ஆட்சியில் மத்திய அரசு 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடாக 3354 வீடுகள் தகுதியே இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.