தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.