தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதே சமயம் அனைத்து கல்லூரிகளிலும் 75 சதவீத பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்ற போது பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 163 இளநிலை மற்றும் 135 முதுநிலை உட்பட மொத்தம் 298 பாடப்பிரிவுகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் 25 சதவீதம் பாடத் திட்டத்தில் மாறுதல்கள் செய்து கொள்ளலாம் எனவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.