தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணிகளும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஷூவும் வழங்கப்பட உள்ளது.

அவ்வாறு விநியோகிக்கப்படும் காலனிகள் மாணவர்களின் கால்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும் விதமாக அளவெடுப்பதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை சிறப்பாக முடிப்பதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.