தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சியானது மாவட்ட அளவில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் வட்டார அளவில் ஆகஸ்ட் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியில் கற்றல் விளைவுகள் மற்றும் மன எழுச்சி நலன் மேம்பாடு குறித்த பொருண்மைகளில் பயிற்சி வழங்க வேண்டும். பயிற்சிக்கான நிதி ஒதுக்கீட்டுத் தொகை பின்னர் விடுவிக்கப்படும் எனவும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு வரை நடைபெற இருக்கும் குரு மற்றும் வட்டார வள மைய கூட்டத்தை உரிய நாட்களில் நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.