மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை மக்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜாதிக்கும் –  மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை – கொள்ளை –  திருட்டு – வழிப்பறி – பாலியல் வன்கொடுமை. நாள்தோறும் தொலைக்காட்சியை திறந்தால் இதுதான் செய்தி. பத்திரிக்கை பார்த்தால் இதுதான் செய்தி. இன்றைக்கு சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் கெட்ட ஆட்சி விடியா திமுக ஆட்சி என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அரசு இருக்கின்ற போது பெண்கள் பாதுகாப்பாக வாழுகின்ற பெருநகரம் சென்னை. பெண்கள் பாதுகாப்பாக வாழ சிறந்த மாநகராட்சி கோவை. நாம் அந்த விருதுகளை பெற்றோம். அப்படி  சட்ட ஒழுங்கை சிறப்பாக பராமரித்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.