தமிழகத்தில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு கட்டணம் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும் மற்ற பிரிவினருக்கு 600 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணைய வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது