தமிழகத்தில் தற்போது அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் மாவட்ட வாரியாக காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், காய்ச்சல் மற்றும் இருமல் என்று யாரும் மருத்துவமனைக்கு வராமல் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.