கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு எதிரொளியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகிக்கும்படி யாராவது இருந்தால் உடனே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.