தமிழகத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பேசிய அமைச்சர், லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக கூறினார். பொட்டல பொருள்கள் விதியில் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாரியத்தில் கடந்த மாதம் வரை, 61 ஆயிரத்து, 141 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, சட்ட விரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிஉள்ளார்.