தமிழகத்தில் பல மாவட்டங்களில் சார் பதிவாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பத்திர பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக வந்த தொடர் புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கடலூர், தேனி, நாகை, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தினர். தமிழக முழுவதும் சுமார் 60 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.33,75,773 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக சில ஆவணங்களும் இந்த சோதனையில் சிக்கியதாக கூறப்படுகிறது.