அதிமுக மற்றும் பாஜக இடையே சமீப காலமாக நடந்த நிகழ்வுகள் கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக முக்கிய தலைவர் தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இரு தரப்பில் இருந்தும் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.