தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் இருந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு எந்த தனியார் பள்ளி ஆவது தங்களது ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் அந்த பள்ளியின் விடைத்தாள்கள் திருத்தப்பட மாட்டாது எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் நிலையும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.