தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று கலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் டாஸ்மாக், பாரதன் உரிய நேரத்தில் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், டாஸ்மாக் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்றுள்ள கிளப் மற்றும் ஹோட்டல்களில்விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.