தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள பள்ளிப்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமி ஊர்வலத்தின் போது வான வேடிக்கை நடந்துள்ளது. அப்போது பட்டாசு தீப்பொறி தேர்ந்த வாகனம் மீது விழுந்துள்ளது. இதில் தேரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆகாஷ் மற்றும் ராகவேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.