தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதன கிடங்குகள், மருந்தகங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறையின் சுவர்களையொட்டி மருந்துகளை வைக்காமல் அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்க வேண்டும். சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வழக்கமான நேரத்தை விட முன்னதாக தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதனால் வெப்பாலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.