ஊழல்கள் குறித்து என்னிடம் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் காலாவதியான அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல்குவாரிகளும் ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.