கோவை சிங்காநல்லூர் பகுதி நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களான ஆசிக் மற்றும் பாலாஜி ஆகியோர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சில நபர்கள் அவர்களை கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.