கரூர்: குளித்தலை கோட்டம் பஞ்சப்பட்டி துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி, புதுவாடி ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதே போல், நச்சலூர் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட நச்சலூர், நல்லூர், ஆர்த்தாம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கள்ளை மற்றும் புரசம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளியான பெரியார் நகர், புதுப்பை ஆகிய இடங்களில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் செம்மாண்டபாளையம், தீத்தாம்பாளையம், தண்ணீர்பந்தல், சின்னக்கரை, கரட்டுப்பாளையம், ஏ.பி.புதூர், செங்காளிபாளையம், மூலனூர் சாலை, மடாமேடு, கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், புள்ளச்செல்லிபாளையம், சுப்பிரமணியம்கவுண்டவலசு, செம்மடை, செந்தலையாம் பாளையம், தங்கமேடு, கணேசன் புதூர், புதுப்பை, காரவலசு, பட்டத்திபாளையம், மொட்டைக்காளி வலசு, கஸ்தூரிபாளையம், மயில்ரங்கம், வெள்ளாத்தாங்கரை புதூர், மூலப்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

புதுச்சேரி: காரைக்காலில் இன்று (புதன்கிழமை) உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காமராஜர் சாலை விரிவாக்கம், எம்.எஸ்.பி நகர், உதயம் நகர், அருண்சங்கர் நகர், ஆரிப் மரைக்கார் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், அம்மன் கோவில்பத்து, காரைக்கால்மேடு மற்றும் கிளிஞ்சல்மேடு பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.

சேலம்: அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாரப்பேட்டை பழைய பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தசரா சப்பரபவனியை முன்னிட்டு மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாரப்பேட்டை விநியோக பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் தசரா நடக்க உள்ளதால், பெருமாள் மேலரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, யாதவர் மேல தெரு, ராமசாமி சன்னதி தெரு, குலசேகர ஆழ்வார் தெரு, தெற்கு முத்தாரம்மன் கோவில் தெரு, தெற்கு பஜாரில் அக்டோபர் 25, 26ஆம் தேதிகளில் பாதுகாப்பு கருதி தேவைப்படும் நேரம் மின்வினியோகம் இருக்காது.

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (புதன்கிழமை) குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர், மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி மற்றும் ஆண்டக்காபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.