தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம் தேதி) முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகையையும் இந்த செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளி கல்வித்துறை.